Saturday 30 May 2015

மா மதுரை


மதுரை இந்த வார்த்தையை கேட்டவுடன் உணர்ச்சி பெருமிதத்துடன் புலகாங்கிதம் அடைவேன். மதுரைக்காரன் என்ற பெருமை என் மனதில் எப்பொழுதும் ஒரு மமதையே ஏற்படுத்தும். மதுரையை பற்றி தவறாகவும், சாதிய மேட்டிமை கொண்டது என்றாலும் கண்டிப்பேன். தமிழகம் முழுவதற்குமான நிலையே மதுரையிலும் தொடர்கின்றது. எம்.ஏ வரலாற்று மாணவனாக மதுரையின் தளவரலாறு படிக்கையில் மகிழ்வுற்றேன். பசுமைநடையின் வாயிலாக மதுரையின் மூளை மூடுக்கெல்லாம் உள்ள தொல்லியல் தலங்களை கண்டு ரசித்துள்ளேன். பசுமைநடை, மதுரையை மேலும் காதலிக்க செய்தது. மதுரையின் பெருமை பற்றி கேட்டிருந்தாலும் படித்திருந்தாலும் மதுரையின் தரவுகள் முடிவுறாத விசயமாகும். அமுதசுரபியாக இன்னும் பல புதிய விசயங்கள் நாளும் அறிந்து வருகிறேன்.

அந்த வரிசையில் பாண்டிய வரலாற்று ஆய்வு மையம் சார்பாக “மாமதுரை “ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறுவது அறிந்தேன். அய்யா சாந்தலிங்கம் மற்றும் இராசேந்திரன் இணைந்து மதுரையை குறித்து புத்தகம் படைத்து இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். 

Tuesday 19 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 4 ?


தமிழக கேரள மாநில கண்ணகி அறக்கட்டளையினரின் கூட்டுகூட்ட முடிவின் படி தமிழக கண்ணகி அறக்கட்டளையினர் மூன்று பானை பொங்கல் மட்டும் வைத்தனர். ஆனால் கேரள தரப்போ மூன்று பானை பொங்கலை கண்ணகி கோவிலுக்கு அருகிலும் தனியாக மிகப்பெரிய சட்டியில் தனி பொங்கல் ஒன்றையும் வைத்தனர். தமிழக தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க கேரள காவல்துறையும், வனத்துறையும் ஏதுமே நடக்காது போல் தமிழகத்தரப்பினரை அந்த இடத்திலிருந்து நகர்த்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். உடன் தமிழக கண்ணகி அறக்கட்டளையினர் செய்தியாளர்களிடம் புகார் தெரிவிக்க அனைவரும் சென்று புகைப்படம் எடுத்தனர். கேரள தரப்போ புகரர் கொடுங்கள், புகைப்படம் எடுங்கள். எங்களுக்கு கேரள காவல், வனத்துறையினர் சப்போர்ட் உள்ளது என ஏளனமாக பார்த்தனர்.

பொங்கல் வைத்து கொண்டு இருக்கும் கேரளா கண்ணகி அறக்கட்டளையினரிடம்  பேச்சு கொடுத்தோம். அவர்களிடம் கண்ணகி கோவிலுக்கான கோரிக்கை தங்கள் அமைப்பின் முயற்சி என்ன? என்பது குறித்து கேட்ட பொழுது அவர்கள் தமிழக தரப்பின் கோரிக்கைகளையே அப்படியே முன்மொழிந்தனர்.

Wednesday 13 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 3 ?


மக்கள் வெள்ளம் கோவிலுக்குள் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர். செய்தியாளர்களுடன் மக்கள் வெளியேறும் பாதை வழியாக கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. சுற்றுச்சுவர்கள் நல்ல பெரிய சைஸ் கற்களால் ஒன்று சொன்னது போல் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது. சுற்றுச்சுவருக்குள் மூன்று சிறிய அளவிலான மண்டபமும் ஒரு மண்டபத்திற்கான பேஸ்மட்டமும் ஆக நான்கு தனி மண்டபங்கள் இருந்தன. 

எந்த மண்டபத்தின் மேலும் கோபுரங்கள் இல்லை.  பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்திருந்தது. சினிமா சூட்டிங் செட் ஏற்பாடு போல் சிதிலமடைந்த கோவில் கோபுரங்கள் மேல் மஞ்சள் துணிகள் கட்டப்பட்டிருந்தன. கோவில் போன்ற தோரணைகள் ரெடிமேடாய் இருந்தது பார்த்ததும் புலனாயிற்று. ஏராளமான பக்தர்கள் கொண்ட  இக்கோவிலை இப்படி கவனிப்பாரற்று சேதமடைய வைத்துள்ளனரே என எண்ணி வருந்தினேன்.

Monday 11 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 2 ?


கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு குமுளியில் ஜீப் பாஸ்  வாங்கி பயணத்தினை தொடர்ந்தோம். குமுளியே கேரளத்து காவல்துறையாலும் பக்தர்களாலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. வரிசையில் நின்று பக்தர்கள் ஜீப் வாகனத்தில் ஏறினர். ஏறினர் என்பதை விட பொதி மூட்டைகளை போன்று ஏற்றப்பட்டனர். செய்தியாளர்கள் ஜீப்பில் 9 பேர் பயணிப்பதே நெரிசலாக இருந்தது. பக்தர்கள் சுமார் 12பேருக்கு மேல் ஒரு ஜீப்பில் பயணித்தால் நிலையை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள்.

புலிகள் காப்பக வனப்பகுதியில் நுழையும் பொழுதே கேரள வனத்துறையினரால் ஜீப் நிறுத்தப்பட்டது. செய்தியாளர்கள் வாகனம் என்றவுடன் உள்ளே எட்டி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் ஏதுமில்லையே என்ற கேள்வியோடு செல்ல அனுமதித்தனர். பக்தர்களின் பைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டது. விபூதி பாக்கெட்கள் கூட பிளாஸ்டிக் என நிராகரிக்கப்பட்டது. பக்தர்களை ஜீப்பிலிருந்து இறக்கி ஒவ்வொருவராக  தனிநபர் சோதனை செய்யப்பட்டு பின் ஜீப்பில் ஏற்றி அனுப்பினர்.
ஆங்காங்கே மருத்துவ பரிசோதனை மையமும் திறந்திருந்தனர்.

Thursday 7 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா? 1



திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் எனது அம்மா  . எனது அப்பாவிற்கு மதுரை. அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை வரும் பொழுதெல்லாம் கண்ணகி வம்புக்கு இழுக்கப்படுவாள். எங்க கண்ணகி உங்க ஊரு எரிச்சது தான் சரி என்றும் மீண்டும் கண்ணகி வரவேண்டும் எனவும் கூறுவார் அம்மா. அப்பாவோ நான் கோவலனா நடந்துகிடாமா போனது தப்பு தான் என அவரும் அவர் குறைகளை கூறுவார்.  ஆம்பளபிள்ளைகள் தான் எப்பவும் அம்மா சைடு தானே. அதனால் எனக்கு  சிறுவயதிலேயே கண்ணகி பிடித்து போய்விட்டாள். கலைஞரின் பூம்புகார் திரைப்படம் வாயிலாக கண்ணகியின் கஷ்டம்  அறிந்து கண்ணீர் விட்டவன் நான். இலக்கிய ஞானத்தில் சிலப்பதிகாரம் பயின்று கண்ணகியை தெரிந்தவர்கள் ஒரு சிலரே. சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் நீதிக்கு போராடி  சேர நாட்டவர்களால் பாடப்பெற்றவள் கண்ணகி. இன்று  கேரளம், இலங்கை பகுதிகளில் ஒருசில மக்களாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் கடவுளாக வணங்கப்படுகிறாள். கண்ணகிக்கு இலங்கையில் 60க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் கண்ணகிக்கு குறிப்பிடதக்க வகையில் கோவில் இல்லை. பல மலைவாழ்ப்பகுதிகளில்  பத்தினி தெய்வ வழிபாடு இருக்கின்றது. பத்தினி தெய்வ  நாட்டார் தெய்வங்களில்   பல கண்ணகியாகவே பார்க்கப்படுகின்றது.

Sunday 3 May 2015

தப்புமா தாண்டிக்குடி ?


ஊர் சிறப்பு:-
தாண்டிக்குடி கடல் மட்டம் 3500 அடி உயரத்தில் 3500 ஆண்டுகால பழமையான  சின்னங்களை கொண்டது. இப்பகுதி மக்கள் முருக கடவுளின் ஆதிதளம் தாண்டிக்குடி என்கின்றனர். முருகன் இம் மலையிலிருந்து தாண்டிக்குதித்து பழனிமலை ஐ அடைந்ததாக ஐதீகம். தாண்டிக்குதி என்பது மருவி தாண்டிக்குடி என மாறியதாம். மனிதர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சித்தர்கள் கண்டுபிடிப்பு காயகல்பம். காயகல்பம் தயாரிப்பில் மிக முக்கிய இடம்வகிப்பது தாண்றிக்காய். தாண்றிக்காய் அதிகமாக விளைந்ததாலும் இப்பகுதிக்கு தாண்டிக்குடி பெயர் காரணமாம். இப்பகுதி மக்கள் கண்ணகி மதுரையிலிருந்து கிளம்பும் பொழுது மூத்தன் முதுவன் என்ற கூட்டத்தினரை அழைத்து வந்து இப்பகுதியில் குடியமர்த்தியதாயும் பெருமை கொள்கின்றனர்.