Tuesday 23 December 2014

சித்தரா? சிவனா? சமணரா?


டிசம்பரில் 43 வது பசுமைநடை சித்தர்மலை என அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். ஏனெனில் சென்ற முறை பசுமைநடையில் சித்தர்மலையின் உயரத்தினையும் தூரத்தினையும் கணக்கில் கொண்டு செல்லவில்லை. தற்பொழுது காலை நடைப்பயிற்சி மூலம் கொஞ்சம் ஸ்லிம்மாக மாறி இருப்பதால் இந்த பரிசோதனை முயற்சியில் ஈடுபட துணிந்தேன். சித்தர்மலையின் சிறப்பாக மலை மேல் சிவன் கோவில் இருப்பதாக கூறினர். சித்தன் போக்கு சிவன் போக்கு என கேள்வி பட்டிருக்கின்றேன். என்ன பெயர் எல்லாம் ஒத்து போகின்றதே என நினைத்தேன். சமணப்படுகைகளும் அமைந்துள்ளதாக அறிந்து மதுரையின் முக்கிய தளத்திற்கு செல்வதினை உணர்ந்தேன். சிவனடியார்கள் இங்கு சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? அல்லது சமணர்களை சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? சென்று தான் பார்போம். என கிளம்பினேன். திருமங்கலத்திலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வயல்வெளி, கண்மாய்களை கடந்து இரு சக்கர வாகன உதவியுடன்  செக்கானூரனியை அடைந்தோம்.

 மதுரையிலிருந்து வரும் பசுமைநடையினர் பல்கலைகழக வாசலில் குழும்பியிருப்பதாக தகவல் வந்தது. செக்கானூரனி கடைகளில் அதிவேக விற்பனை கல்லா கட்டிய ஜோரு ஞாயிற்றுகிழமை காலை என்பதனை நினைவுப்படுத்தியது.

Saturday 6 December 2014

திரைத்திருவிழா


தமிழகத்தில் திரைப்படங்களின் தாக்கத்தினைப்பற்றி சொல்வதாக இருந்தால் நாள் போதாது. எழுதுவதாக இருந்தால் பக்கங்கள் போதாது. வருங்கால முதல்வரை சினிமாவில் தேடுவதிலிருந்து தமிழர்களின் திரைப்படப் பக்தியினை நாம் அறியலாம்.  அடுத்த தலைமுறையினரை சீர்படுத்திட தமிழகத்தில் திரைப்படங்களை  நல்ல முறையில் மாற்றி அமைத்திட வேண்டும். அதன் முன் முயற்சியினை நோக்கி  குறுப்படங்களும் ஆவணப்படங்களும் சிறந்த முறையில் பயணிக்கின்றன. லாப நோக்கமின்றி தயாரிக்கப்படும் இவ்வகையிலான குறும்படங்கள்,ஆவணப்படங்கள் நாடு காணும் பல பிரச்சனைகளை மக்களுக்கு தெரிவிக்கவும், இயக்குநர் தன்னை யார் என்று உலகிற்கு நிரூபிக்கவும், நிலைநிறுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது. பலநாட்டு கலாச்சாரங்களையும் நாம் காணும் வகையில் பல மொழிப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

இந்தியப் படங்களுடன்  மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம்,  ஃப்ரான்ஸ்,  அமெரிக்கா,  போலந்து,  ஆர்மீனியா,  ஆஃப்கானிஸ்தான்,  பாலஸ்தீனம், ஸ்விட்சர்லாந்து, உக்ரேன், ரஷ்யா, கெளதமாலா, போர்ச்சுகல் மற்றும் புர்கினோ ஃபாசோ ஆகிய நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்படவுள்ளன. தற்பொழுது மதுரை காந்தி மியூசியத்தில்  16வது குறும்பட மற்றும் ஆவணப்பட விழா நடைபெறுகின்றது. இதில் தீபிகா தங்கவேலு, ஸ்ரீரசா, பி.பாபுராஜ், கோபால் மேனன், ஸ்ரீமித் ஆகிய படங்களின் இயக்குநர்களும்,.மார்க்ஸ், .ராமசாமி, .முத்துக்கிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகிய எழுத்தாளர்களும், ஓவியர்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர்.