Sunday 21 August 2016

தே மதுர தேவன் குறிச்சி



மலையும் மலை சார்ந்த பகுதியை காண்பது என்றால் மகிழ்ச்சி தான்.   6000ம்  ஆண்டுகால தள வரலாறும் , ஆறு விதக்  கடவுள் வழிபாடும் எட்டு கல்வெட்டுகளும் ஒருங்கே இணைந்த  அதிசய மலை  தேவன்குறிச்சி .   மேற்கு தொடர்ச்சி மலைகளின்  அழகில் இது அழகிற்கு அழகு சேர்க்கக்கூடியது.  இம்மலை  மதுரையிலிருந்து  சுமார் 40கிமீ  தூரத்தில் அமைந்துள்ளது.  மதுரை , திருமங்கலம், தே.கல்லுப்பட்டி வழியாக  பேரையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  தே.கல்லுப்பட்டி  என்னும்  ஊரின் பெயரில் தே என்பது  தேவன்குறிச்சி யையே  குறிக்கும். சூழல் உலாவின்  சமீபத்திய பயணமான  தேவன் குறிச்சி (குறிஞ்சி) யின் மறக்கவியலா பயணக்குறிப்புகள் தங்களின் இனிய பார்வைக்கு…

ஆறு கடவுள் வழிபாடு.

ஸ்ரீ அக்னீஸ்வரர்  கோமதி அம்மன் கோயில்”  என்ற வரவேற்பு நுழைவாயில் நுழைந்தால் இடது புறம் நடுகல் வழிபாடும் நடைபாதைக்கு நேராக புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில்  ஒன்றும் உள்ளது.

Saturday 6 August 2016

பாலுக்கும் புற்றுக்குமான பிணைப்பு



வருமானம், வியாபாரம் மீதான விசாலப்பார்வை விருந்து என்ற தமிழர் பாரம்பரியத்தை விடைபெற செய்துவிடுமோ என்று கவலை கொள்கின்ற எண்ணில் அடக்காதோர்களில் நானும் ஒருவன். விருந்து என்றவுடன் விரண்டோடும் காலமாய் நகர்புறம் உள்ளது. சமீபத்தில் கிராமப்புற நண்பர் ஒருவர் வீட்டிற்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றோம்.. நண்பர் கோழி கறிக்கடை நடத்துபவர். நான் சென்றதன் ரகசியம் உங்களுக்கு தெரிந்திருக்குமே!. நகரின் வெளிப்புற பகுதியில் குடியிருப்பு. வியாபார நோக்கில் சுமார் 20 வெள்ளாடுகளும், 50க்கும் மேற்பட்ட நாட்டு சேவக் கோழிகளும் 4 வாத்து சில புறாக்கள் என  கண்களுக்கு எங்கு பார்த்தாலும் உயிரினங்கள் மகிழ்வாய் காட்சித் தந்தன. நாங்கள் சென்ற நேரம் வளர்ப்பு பிராணிகளின் பிரசவ காலமோ என்னவோ பலவும் குட்டி போட்டிருந்தன.  இதில் ஆடு முதல் நாள் தான் குட்டி போட்டிருந்தது. நாய் சிலநாட்களுக்கு முன்பு தான் குட்டி போட்டுள்ளது. அவர்கள் வீட்டை ஒட்டிய மரத்தில் அணில் குஞ்சி பொறித்திருந்தது. மற்றொரு மரத்தில் காக்கா முட்டையிட்டு குஞ்சு பொறிந்து குஞ்சுகள் வெளியே வந்து கொண்டிருப்பதாக மாடியில் இருந்து லைவ் ரீலே  குட்டீஸ்கள் செய்தன.