Saturday 12 September 2015

குல்லூர் சந்தை அணை


வெயில் என்றவுடன் ஞாபகம் வரும் இடம் விருதுநகர். பல நகரங்களில் சமீப காலமாக தான் அனைத்து தெருக்களும் சிமெண்ட் ஹாலோ பிளாக்களுக்கு மாறி வருகின்றன. ஆனால் விருதுநகர் தெருகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட்க்கு மாறி விட்டன. இதன் காரணமாகவும் வெயிலின் தாக்கம் அதிகம். அத்தோடு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே சென்று விட்டது.  சூரியன் கிழக்கில் உதிப்பதாக பள்ளியில் படித்தாலும் விருதுநகரில் உதிப்பதாகவே நான்  எண்ணிவருகிறேன். வியாபாரம் என்றால் விருதுநகர் அதே சமயம் வறட்சி என்றாலும் விருதுநகர் என்றே பெயர் பெற்றுவிட்டது. இங்கே ஒவ்வொரு தேர்தலிலும் குடிநீர் பஞ்சம் தீர்ப்பதாகவே சொல்லி ஓட்டு வேட்டையாடுவர் அரசியல்வாதிகள். தமிழகம் முழுவதும் நடைபெறும் நடைமுறை தான் என்கிறீர்களா? ஆம் இங்கே கொஞ்சம் ஜாஸ்தி.