Tuesday 25 November 2014

மாங்குளம் பசுமைநடை


                         (மீனாட்சிபுரம்)
பயணங்களே  வாழ்க்கை பாடத்தின் பள்ளி. தாம் வாழும் பகுதிகளின் வரலாறு அறியாதவன் மனிதன் என்பதற்கே அருகதையற்றவன். பறவைகள் பூமி முழுமைக்கும் கட்டுப்பாடின்றி பறந்து திறிந்து பயணிகின்றன.  மனிதனோ பயணங்கள் மறந்து கூண்டுகிளிகளாய் வெந்ததை தின்று விதிவந்தால் சாவு என மாறி போகின்றான். தோழர் சேகுவேரா வின் இளமைக்கால மோட்டார் சைக்கிள் பயணங்களே போராட்டங்களுக்கான விதை.

“பயணங்களே மனித மனங்களின் கசடு போக்கும் மந்திரம்”
                                எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்.

இந்த மந்திரத்தின் சூட்சமம் தெரிந்ததால் நகரின் தொன்மை வாய்ந்தப்பகுதிகளை மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது “பசுமைநடை”.  23.11.2014 அன்று 42 வது பசுமைநடையாக மதுரை மாங்குளம் செல்வதாக பசுமைநடைக்குழு முடிவுசெய்தது.

Thursday 20 November 2014

சோழவந்தான் பறவை பார்வை


மதுரையின் சோலை சோழவந்தான். சிறு வயதில் மேலக்கால், திருவேடகம் தர்ஹாக்களில்  இரவெல்லாம் தங்கி சந்தனக்கூடு பார்த்து மகிழ்வேன். காலையில் வைகை ஆற்றில் குளிப்பதற்காக சோழவந்தான் வந்திருக்கின்றேன். பார்க்க காவேரி ஆற்றுப்படுகையை போன்றே பச்சைபசேலென்று இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் சென்ற பொழுது மிகுந்த வறட்சியாக இருந்தது. மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். மீண்டும் இந்த மண் செழிக்க வழியிருக்கின்றதா என எண்ணினேன். 

சென்ற 9.11.2014 அன்று இறகுகள் அமைப்பின் சார்பாக பறவை பார்வையிட மீண்டும் சோழவந்தான் புறப்பட்டேன். செல்லும் வழியெல்லாம் மெல்ல மெல்ல வறட்சிகள் நீங்கி வருவதினை கண்டேன். கண்மாய்களில் தண்ணீர் கொஞ்சமெனும் இருந்தது ஆறுதல். பறவைகள், விளைநிலங்கள், மனிதர்களை பார்வையிடுகையில் அனைவரும் மகிழ்வாய் எனக்கு காட்டியது. இந்தப்பதிவினை நீங்கள் சோழவந்தானை பறவை பார்வை பார்ப்பதாக எண்ணினாலும் நலம். தொடர்ந்து சோழவந்தானில் நான் பார்த்த பறவைகளையும் விவசாய விளைநிலத்தினையும் வாங்க பார்க்கலாம்.

Saturday 15 November 2014

இறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2


நாணல் நண்பர்களும், இறகுகள் அமைப்பினரும் இணைந்து நடத்திய மதுரை சூழலியல் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர் பார்வை. இறகுகள் அமைப்பின் ரவிந்திரன் அவர்கள் சூழலியல் சார்ந்த பறவையியல் களஆய்வு குறித்து உரையாற்றினார். அவைகள் பின்வருமாறு. காலநிலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பறவைகள் தங்கள்  தங்குமிடங்களை மாற்றிக் கொள்கின்றன. இந்த நிகழ்வினை வலசை போதல் என்பர். ஒருபகுதியில் பறவைகள் வரவுகளின் எண்ணிக்கையையும் தன்மையும் கொண்டு வரவிருக்கும் மழை அளவினை அறிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவியின் அழிவில் செல்போன் டவர்கள் ஒரு காரணமாக அமைந்தாலும் நம்முடைய வாழ்வியல் நடைமுறையும் ஒரு பெரும் காரணமாகும். சென்ற காலங்களில் கோதுமை,அரிசி  மாவு தயாரிக்க வீட்டில் பெண்கள் கோதுமையினை காயவைத்து அரைக்க கொடுத்து வாங்குவர். பலசரக்கு கடையினர் பலதானிய வகைகளை பிரித்து காய வைத்து முன்பு வழங்கினர். ஆனால் இன்று ஷாப்பிங் மால்கள் மூலம் பாக்கெட் பொருட்களாக வாங்கும் பழக்கத்திற்கு வந்ததால் குருவிகளுக்கு சிதறும் தானியங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Tuesday 11 November 2014

சலீம் அலி

சலீம் அலி (1896- 1987)


இவர் அனார்கலியின் சலீம் அல்ல அன்னம் கிளிகளின் சலீம். காக்கைகுருவியும் எங்கள் ஜாதி என்ற பாரதியின் பாடலை உண்மைப்படுத்தியவர். வேட்டைக்கார குடும்பத்தில் பிறந்தாலும் பறவைகள் மீது பரிவு கொண்டார். பறவைகள் பார்வையிடுவதே பணியாக்கி கொண்டார். வேட்டையில் சிக்கிய பறவையின் கழுத்துப்பட்டையை கவனித்தார். அது மஞ்சள் நிறத்தில் இருந்தது.பறவையை பற்றிய மேல் தகவலுக்கு இயற்கை வரலாற்று மையத்தினை தொடர்புகொண்டார். பாம்பே இயற்கை வரலாற்று மையம் ஆங்கிலேயர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. மையத்தில் சின்னதும் பெரியதுமான பறவைகளை பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதினை கண்டார் சலீம். அது முதலே அவருக்கு பறவை காதல் பற்றிக்கொண்டது.

Thursday 6 November 2014

கமலும் நானும்


சிறுவயது முதலே கமல் இந்த வார்த்தை எனது ஊக்கமருந்து ஆகும். எனது தாய் மாமன்  மற்றும் எனது (பெரியப்பா) அண்ணன்மார்கள் கமல் ரசிகர்கள். இயற்கையாகவே நானும் கமல் ரசிகன். சலங்கைஒலி திரைப்படத்தினை பார்த்துவிட்டு நான் ஆடிய பரதத்தினை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செய்வர். நான் படித்த பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிடும் நான் கமல் வெறியன் என. கல்லூரி ஆசிரியர் என்னை குணா என்றே அழைத்து கிண்டல் செய்வார். உண்மையில் நான் கமல் மீது கொண்ட காதலில் குணா கமலாகவே தான் இருந்தேன் என்றால் மிகையாகாது.

ராஜராஜசோழன் சதயவிழா



தஞ்சையின்  சிறப்புகளான  “தமிழகத்தின் நெற்களஞ்சியம், பெரிய கோவில் இவ்விரண்டையும்  நம்மில் அறியாதவர்கள் இலர்”. பெரிய கோவிலின் சிறப்புகளை பலமுறை கேட்டு இருந்தாலும் நேரில் பார்க்கும் தருவாய். இந்தஆண்டே கிடைத்தது. நமது தொல்லியல்  அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மாமன்னன் இராசராசன் விருது  பெறுகிறார் என்றவுடன் திருமங்கலம் பசுமைநடை அன்பர்கள் கண்டிப்பாக அந்த தருணத்தில் நாம் தஞ்சையில் இருந்தாக வேண்டும் என தீர்மானித்தோம்.