Wednesday 30 April 2014

உழைப்பாளி யார்?


சமீபத்தில் தொடர் விடுமுறை  கிடைக்க பக்கத்து கிராமத்து நண்பனின் விவசாய நிலம்  பார்க்க கிளம்பினேன். எங்க ஊரிலிருந்து கால்மணி நேர பயணத்தில் கிராமம் சென்றேன். நண்பனுடன் ஊர் மந்தைக்கு அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டப்படி கடையை நோட்டமிட்டேன். அடுப்பில் பணியாரம் போட்டப்படி ஒரு பெண்ணும் டீப்பற்றையில் இருந்தவரும் பேசியதிலிருந்து கடையை நடத்தும் இவர்கள் தம்பதியர் என தெரிந்து கொண்டேன். பனியனுடன் இருக்கும் டீ மாஸ்டரிடம் நம்ம வாயிதான் சும்மா இருக்காதே   பேச்சு கொடுத்தேன்.என்னனே கிராமத்திலே டீக்கடை வச்சு எப்படி கட்டுதுனே? அவரு தம்பி எங்கப்பாரு விவசாயம் பார்த்தாரு ,நான் விவசாயம் பாக்க புடிக்காம மதுரையலே ஒரு பாய் மூலமா துபாய் போனேன். அங்க ஸ்டேசினரி கடையிலே லோடுமேனா மூணு வருஷம் வேலை பார்த்தேன். லிவுக்கு வந்தேன்.திரும்பி போக மனசு வரல.கொஞ்சம் கையில இருந்த பணத்தகொண்டு, பஸ்ஸூ இங்க நிண்டு போறதாலேயும், எதிக்க இருக்க கவர்மெண்ட் ஸ்கூல் பசங்க,வாத்தியாருங்க அப்புறம் ஊருக்குள்ள இப்ப விவசாயம் அதிக இல்லாததால பசுமாடு யாருட்டேயும் இல்லேன்றனால ஏதோ டீக்கடையும் பெட்டிகடையுமா இந்த கடையை கட்டி புருஷனும் பொண்டாட்டியுமா காலத்த ஒட்டுரோமினார்.

Wednesday 23 April 2014

விழித்துக்கொண்ட விவசாய வி.ஐ.பிகள்

2014 பாராளுமன்ற தேர்தல் களத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பலலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம் என்பது இடம்பிடிக்கின்றது. இந்த வேலைவாய்ப்புகள் மூலம் நகரமயமாக்கல் என்பது இன்னும் அதிகரிக்கும். கிராமங்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணமே உள்ளனர். தற்பொழுது 50% உள்ள நகரமயமானது மேலும் அதிகரிக்கையில் விவசாயம் முற்றிலும் நின்று உணவிற்கு நாம் இறக்குமதியினையே நம்பிய நிலைக்கு தள்ளப்படுவோம். தமிழகத்தில் விவசாயநிலையானது சென்ற காலங்களை ஒப்பிடுகையில் -12% என்ற பின்தங்கிய நிலைதனை அடைந்து வறட்சிமாநிலமாக திகழ்கின்றது.

“கியூபா நாடானது இலங்கையை விட பரப்பளவில் குறைவாக இருந்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளமைக்கு அங்கு கடைபிடிக்கப்படும் இயற்கை விவசாயமே காரணம்”