Wednesday 6 February 2013

குற்றப்பதிவு குதிரைகொம்பே


 

 

குற்றப்பதிவு குதிரைகொம்பே.


தமிழகத்தில் காவல்துறை அலுவலகம் என்பது அந்த அந்தப்பகுதியின் ஆளும்கட்சி அலுவலகமாகவே இந்த இரண்டுகட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றது.எந்த சட்டமீறலுக்கும் வழக்குப்பதிவு என்பது அந்தப்பகுதி மாவட்டச்செயலாளரின் கையில் தான் உள்ளது.காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுப்பது பெரும்பாலும் தற்பொழுது தவிர்க்கப்பட்டு ஆளும்கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து மூலமே தீர்க்கப்பட்டுவருகின்றது. காவல்துறைக்கு   புகார்கொடுக்கவருபவர்களை அந்தப்பகுதி அரசியல்வாதிகளிடம் கட்டப்பஞ்சாயத்திற்கு அனுப்பி பங்கு பணமும் பெற்றுவரும் காவல்துறையினர் ஏராளம். இதில் திருட்டு,வழிப்பறி போன்ற குற்றங்களில் புகாரை பதிவு செய்யக்கூறும்  அரசியல்வாதிகளிடம் தாங்கள் கட்டப்பஞ்சாயத்தில் தலையிடாமல் இருக்கின்ற காரணத்தை கூறி காவல்துறைஎப்படியும் வழக்குப்பதிவை தவிர்க்கின்றனர்.இதில் சென்ற ஆண்டை விட தற்பொழுது குற்றங்கள் குறைந்து இருப்பதாக வேறு செய்திவெளியிட்டு வருகின்றன.உண்மையில் தமிழகத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான குற்றங்களுக்கு வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வெகுஜன மக்களை ஏமாற்றிவருகின்றனர்.கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து தான் ஆகவேண்டும் என்று நீதிமன்றம் செல்பவர்களுக்கு மட்டுமே வழக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. திருட்டுவழக்குகளில் வழக்கினைபதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயப்படுத்தினால் கண்டுப்பிடிக்கமுடியவில்லை என வழக்கினை முடித்துவிடுவோம் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் என கூறியே வழக்குப்பதிவினை காவல்துறையினர் தவிர்த்து வருகின்றனர்.


மத்திய உள்துறை செயலாளர் அறிக்கை தற்போதைய காவல்துறையின் செயல்பாட்டினை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளது.


 

சஸ்பென்ட் செய்ய வேண்டும் : மத்திய உள்துறை செயலாளர்!

புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைப் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ஆர்.கே சிங் பேசுகையில், போலீசார் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நாட்டில் புகார் கொடுப்பதற்கோ அல்லது ஏற்கனவே கொடுத்த புகார் பற்றி விசாரிப்பதற்கோ பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வரும்போது வேதனையையே அனுபவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

அதிலும் பெண்கள், மிகவும் நலிந்த பிரிவினர் ஆகியோர், உள்ளூர் எம் எல் ஏக்களுடன் காவல்துறையை நாடினால் மட்டுமே, சரியான பதில் பெற முடிகிறது. இல்லாவிட்டால் தாங்கள் கொடுத்த புகாரின் நிலை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இந்த நிலைமை மாறவேண்டும் புகாரைப் பதிவு செய்ய மறுப்பது என்பது சட்டத்தை மீறிய செயல். எனவே புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும். இதில் தயக்கம் காட்டக் கூடாது. மேலும்,

பெண்கள், நலிந்த பிரிவினர் எந்த வித தயக்கமும் இன்றி உதவிக்கு காவல்துறையை நாடும் அளவிற்கு சூழலை உருவாக்க வேண்டும். மானபங்கம் போன்ற புகார்களை பெண்கள் கூறத் தயக்கப் படும் சூழல் இல்லாதவாறு, காவல் நிலையங்களில் பெண் போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

ஒரு வழக்கின் விசாரணையை முடிக்க கால நிர்ணயம் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மூன்று மாதத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம். வழக்கு தாமதமானால் சாட்சிகள் சாட்சி அளிக்க முன்வரமாட்டார்கள். இதுபோன்ற சிக்கல் இருப்பதால் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆர்.கே சிங் கூறியுள்ளார்

 

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் எழுத்தளவிலும் பேச்சளவிலும் மட்டுமில்லாமல் சாமானியர்களிடம் காவலர்கள் உண்மையாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவில் குற்றங்கள் உண்மையில் குறைய வாய்ப்புள்ளது.

.ஷாஜஹான்.
99425 22470.

Friday 1 February 2013

அன்னமிட்டவர்களின் அண்மைநிலைமை



அன்னமிட்டவர்களின் அண்மைநிலைமை
தமிழகத்தில் இன்று விவசாயநிலங்கள் அனைத்தும் பொய்த்து போய் நமக்கு அன்னமிட்டவர்கள் பலர் இன்று தற்கொலை முடிவுக்கும், மற்றும் சிலர் வேலை தேடி இடம்பெயரவும் முடிவெடுத்துள்ளனர். இதில் மத்திய மாநில அரசுகள் இன்றைய நிலைகளை மூடிமறைக்கும் வேலையிலும் தங்களுக்கிடையே ஈகோ பார்த்து விவசாயிகளை முற்றும் ஒழித்துவிடும் பணியினை செய்துவருகின்றனர்.  தமிழகமே இன்று வறட்சி பாதித்த பகுதியாக அமைத்துவிட்ட நிலையில்
விவசாயிகளின் நிலைதனை மனதில்கொண்டு ஏதாவது நிவாரண ஏற்பாட்டினை செய்ய வேண்டிய அரசுகள் நீதிமன்றங்களில் விவசாயிகளின் தற்கொலைக்கு மனநோயும் வீட்டுபிரச்சனைகளும் காரணமென கூறி வருவது

கட்டுச்சோற்றுக்குள் முழுபூசணியை மறைப்பதை போன்றுள்ளது. தமிழகத்தினை மாறிமாறி ஆளும் இந்த இரண்டு கட்சியினரும் தங்களுக்கிடையே மற்றவர் ஆட்சியில் எதிர்கட்சியாக இருக்கும்பொழுது கஞ்சி தொட்டி திறப்பதும் பின்பு ஆட்சிக்கு வந்து விட்டால் விவசாய வளர்ச்சிக்கென எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதும் தொடர்ந்து வருகின்றது
.
வறட்சியால் விவசாயம் பாதித்த நிலையில், மாற்று வேலை தேடி, வெளி மாநிலங்களுக்கு செல்ல, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், ஐந்து லட்சம் பேர் செல்லக் கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இல்லை. விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களே உள்ளன. பொய்த்தது சாகுபடி தற்போதைய கணக்குப்படி, டெல்டா மாவட்டங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.இந்த ஆண்டில், வறட்சியால் விவசாயம் பாதித்ததால், அதிர்ச்சிஅடைந்த 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

 

குறுவை, சம்பா சாகுபடி பொய்த்ததாலும், அடுத்த குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததாலும், என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர்.

 

கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் சூளைகளில் கல் அறுப்பு, கட்டட வேலை உள்ளிட்டவை செல்வதற்கு, ஐந்து லட்ச ம் தொழிலாளர்கள் தயாராகியுள்ளனர்.தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் முடங்கிஉள்ளதால், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லாமல், வெளிமாநிலங்களுக்கு செல்லும் முடிவை விவசாய தொழிலாளர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

 

உன் நண்பனைக் காட்டு உன்னைப்பற்றி கூறுகின்றேன் என்பர். அதுபோன்றே உழைக்கும் விவசாயின் நிலையைக் கொண்டே அந்த நாட்டின் நிலைதனை அறியலாம்.தற்பொழுது அவசரகதியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளைக்
கொண்ட குழுவினை அனுப்பி நிலையினை அறியும் அரசு விவசாயிகளின் இன்றைய நிலையில் அவர்களின் வாயினை அடைப்பதற்கான முயற்சியினை மட்டும் எடுக்காமல் எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்காமல் இருக்கவும்
பின் எப்போழுதும் இந்நிலை ஏற்படாமல் இருக்க வழிவகையினை செய்யவேண்டும்